அரசு தொழில் நுட்ப தேர்வு துறைக்கு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கண்டனம்

கோவை: அரசு தொழில் நுட்ப தேர்வு துறைக்கு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை: அரசு தொழில் நுட்ப தேர்வு துறைக்கு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒரே ஆதி கால நடைமுறையில் மட்டுமே தொழில் நுட்ப தேர்வு நடத்தி வரும் நிலையில் வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம், தனியாகவும், கேரளா தேர்வர்களுக்கு என்று மலையாளம் மொழியில் தனியாகவும் வினாத்தாள் கொடுத்து தேர்வு நடத்தி அதற்கு ஒரு தேர்வர்களிடம் 47 ரூபாய் கட்டணம் வசூல் செய்தது அரசு தொழில் நுட்ப தேர்வு துறை.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகப் படுத்தி அரசு தொழில் நுட்ப தேர்வு நடத்தி வருகின்றனர். இந்த தொழில் நுட்ப தேர்வு மட்டும் வைத்துக் கொண்டு போலி பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் நடைபெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த தொழில் நுட்ப தேர்வு திருத்தி மதிப்பெண் எவ்வளவு என்று அறிவிப்பது இல்லை. மறு கூட்டல் கூட அனுமதி மறுக்கப்பட்டது.

வசூல் வேட்டை

ஒரு தேர்வர்கள் இடம் 10,000 ரூபாய் வரை வசூலித்து வந்த நிகழ்வுகள் பல முறை கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் தேர்வு துறை இயக்குனர் இடம் ஆதாரத்துடன் சமர்ப்பித்து உள்ளார் என்பது தேர்வு துறை இயக்குனர் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு தொழில் நுட்ப தேர்வுக்கு தமிழ் வழி சான்றிதழ் தேவை இல்லை என்று தேர்வுத் துறை அறிக்கை வெளியிட வேண்டும். அதற்கு மாறாக தமிழ் வழி சான்றிதழ் தர முடியாது என்று உத்தரவு வெளியிடுவது வருந்தத்தக்கது.

இவ்வாறு தேர்வு துறை இயக்குனர் அறிவிப்பு பற்றி கலை ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் பகிரங்கமாக அரசு தொழில் நுட்ப தேர்வு துறைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வருகின்ற திங்கள் கிழமை தேர்வு துறை இயக்குனர் அவர்களிடம் விளக்கம் கேட்க கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் சென்னை செலவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...