கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் நேற்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தின கொண்டாடப்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தில் நேற்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தின கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அம்மருத்துவமனையின் பெண்கள் நலத்துறை மருத்துவர் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதனையை பெண்கள் சுயமாக செய்து கொள்ளும் முறையை விளக்கினார்.

இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அபர்ணா கூறுகையில், "இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, 71 சதவீத பெண்கள் கிராமப்புறங்களில் துணியை பயன்படுத்துகின்றனர், அதில் 75.4 சதவிகிதத்தினர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்." என்றார்.

அமர்வுக்குப் பின், அனைத்து பெண்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை இருப்பது, ஒழுங்கற்ற கருத்தடை மற்றும் மகளிர் விவகார பிரச்சினைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.


ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அம்மருத்துவமனையின் பெண்கள் நலத்துறை மருத்துவர் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் பரிசோதனையை பெண்கள் சுயமாக செய்து கொள்ளும் முறையை விளக்கினார்.

இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அபர்ணா கூறுகையில், "இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் துணிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். பொதுவாக, 71 சதவீத பெண்கள் கிராமப்புறங்களில் துணியை பயன்படுத்துகின்றனர், அதில் 75.4 சதவிகிதத்தினர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள்." என்றார்.

அமர்வுக்குப் பின், அனைத்து பெண்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், பெரும்பாலான பெண்களுக்கு இரத்த சோகை இருப்பது, ஒழுங்கற்ற கருத்தடை மற்றும் மகளிர் விவகார பிரச்சினைகள் இருப்பதைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
