நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த மழையின் போது உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு போன்ற பகுதிகளில் மழை அதிகளவு பெய்யும். இந்தாண்டு இன்னும் ஒரு சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் அடித்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், திடீரென உதகையில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த மழையின் போது உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு போன்ற பகுதிகளில் மழை அதிகளவு பெய்யும். இந்தாண்டு இன்னும் ஒரு சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் அடித்து வந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், திடீரென உதகையில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.