நண்பனுக்காக மூன்று பேரை கொன்றேன்: மும்பையில் கைதான பிரபல ரவுடி கோவையில் வாக்குமூலம்

கோவை: சூலூர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான மோகன்ராம் காவல்துறையினரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை: சூலூர் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான மோகன்ராம் காவல்துறையினரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பழிக்குப்பழியாக மகாதேவன், தியாகு, அருண் ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 21 பேரை சூலூர் போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான மோகன்ராமை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரை மும்பையில் வைத்து கோவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். 



பின்னர் கோவை அழைத்து வரப்பட்ட மோகன்ராம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது உயிர் நண்பனின் உறவினரை மகாதேவன், தியாகராஜன் ஆகியோர் கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான அவர்கள் 3 பேரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். பின்னர் அவர்கள் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ஆம் தேதி கோவை சிறையில் இருந்து வெளியே வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனே நாங்கள் அவர்களை கொலை செய்யத் திட்டம் தீட்டினோம். இதற்காக நாங்கள் ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி கோவை வந்து மத்திய சிறையின் அருகே உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். எப்படியும் அவர்கள் 3 பேரும் தஞ்சாவூருக்கு தான் செல்வார்கள். அதற்கு அவர்கள் கோவை-திருச்சி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

எனவே அவர்களை அந்த சாலையில் வழிமறித்து கொலை செய்ய திட்டம் தீட்டினோம். சம்பவம் நடந்த அன்று இரவு 8 மணிக்கு அவர்கள் 3 பேரும் சிறையை விட்டு வெளியே வந்தனர். அப்போது நாங்கள் அங்கு ஒரு காருக்குள் மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டே இருந்தோம்.

அவர்கள் ஒரு காரில் ஏறி கோவை திருச்சி சாலையில் வேகமாகச் சென்றனர். அந்த காரை பின்தொடர்ந்து நாங்கள் மூன்று கார்களில் சென்றோம். அவர்கள் சூலூரை கடந்து சென்ற பின்னர் தான் கொலை செய்ய முடிவு செய்தோம். ஆனால், அவர்களின் கார் சிந்தாமணி புதூர் அருகே எல்.என்.டி பைபாஸ் சாலையில் உள்ள சிக்னலில் நின்றது.

அப்போது அங்கு நின்ற வாகனங்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவு இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன். அவர்கள் சென்ற காருக்கு முன் சென்று எங்கள் காரை குறுக்கே நிறுத்தி பின் கையில் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் காரைவிட்டு கீழே இறங்கினேன். என்னைப் பார்த்ததும் காரின் முன் பகுதியில் இருந்த மகாதேவன் காரை வேறு வழியாக திருப்பும் படி ஓட்டுநரிடம் கூறினார்.

எனவே அந்த கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினேன். ஓட்டுநர் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் அவரால் காரை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து காருக்குள் இருந்த மற்ற 7 பேரும் கீழே இறங்கி ஓடினார்கள். அதில் மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகியோர் மட்டுமே எங்களிடம் சிக்கினார்கள். எனவே நாங்கள் அவர்களின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தோம்.

இது நாங்கள் கூலிக்காக செய்த கொலை அல்ல என்பது நண்பனுக்காக அவன் மீது நான் வைத்திருந்த பாசம் காரணமாக செய்த கொலை. இதற்காக நாங்கள் எந்த வித பணமும் வாங்கவில்லை. இந்த சம்பவம் நடந்து முடிந்ததும் போலீசார் என்னை என்கவுண்டரில் கொன்றுவிடுவார்கள் என்று நினைத்து குஜராத் மாநிலத்துக்குச் சென்று அங்கிருந்து ஒரு ஆண்டுக்கு முன்பு மும்பை சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். எனினும் எனது இடத்தை எப்படியோ கண்டுபிடித்து போலீசார் கைது செய்து விட்டனர்

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...