அரசுப் பேருந்தின் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீதான ஆணை ரத்து செய்யப்பட்டது.
அரசுப் பேருந்தின் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீதான ஆணை ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான விஜயகுமார், பழனி - திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் தண்ணீர் ஒழுகி வருவதாகவும், பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும், இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து கிளை மேலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
விஜயகுமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. விஜயகுமாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், பராமரிப்பின்றி உள்ள அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பணிக்குச் சென்ற விஜயகுமாரை, தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறி, அதற்கான உத்தரவை பழனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் வழங்கியுள்ளார்.
அதில் பணியின்போது இருக்கையில் அமர்ந்து, பேருந்தை இயக்கிக் கொண்டே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும்படி வாட்சாப்பில் செய்தியாக பேட்டி கொடுத்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்பட்டதாக ஆணையில் கிளை மேலாளர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் விஜகுமார், தவறு செய்யாத தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளை மேலாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஜயகுமாருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சமூக ஆர்வலர்களும் ஓட்டுநரின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி, ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்டு உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை பழனி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான விஜயகுமார், பழனி - திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் தண்ணீர் ஒழுகி வருவதாகவும், பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும், இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து கிளை மேலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
விஜயகுமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. விஜயகுமாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், பராமரிப்பின்றி உள்ள அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பணிக்குச் சென்ற விஜயகுமாரை, தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறி, அதற்கான உத்தரவை பழனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் வழங்கியுள்ளார்.
அதில் பணியின்போது இருக்கையில் அமர்ந்து, பேருந்தை இயக்கிக் கொண்டே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும்படி வாட்சாப்பில் செய்தியாக பேட்டி கொடுத்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்பட்டதாக ஆணையில் கிளை மேலாளர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் விஜகுமார், தவறு செய்யாத தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளை மேலாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஜயகுமாருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சமூக ஆர்வலர்களும் ஓட்டுநரின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி, ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்டு உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை பழனி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பிறப்பித்துள்ளார்.