13 ஆண்டுகள் பழமையான சந்தனமரம் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வெட்டிக் கடத்தல்

கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் 13 ஆண்டுகள் பழமையான சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : ரேஸ்கோர்ஸ் பகுதியில் 13 ஆண்டுகள் பழமையான சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு அருகே இருந்த விலையுயர்ந்த சந்தன மரம் ஏற்கனவே வெட்டப்பட்டு கடத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மர்மநபர்களால் சர்வ சாதாரணமாக மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 13 ஆண்டுகள் பழமையான மேலும் ஒரு சந்தனமரத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது. 



இது குறித்து ஓசை அமைப்பைச் சேர்ந்த கே. சையத் கூறுகையில், "ரேஸ்கோர்ஸ் பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லாததே, சந்தன மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு, திருடப்படுவதற்கு காரணமாகும். ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் உள்பட பல்வேறு அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் நிறைந்த முக்கிய பகுதியாகும். இந்தப் பகுதிகளிலேயே இது போன்ற சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்து வருவதால், பிற பகுதிகளில் சமூக சட்ட விரோத நடவடிக்கைகள் எளிதில் நிகழும்," என்றார். 



இதனிடையே, சந்தன மரம் வெட்டி, திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...