அடுத்தாண்டு முதல் சிங்காநல்லூர் குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை: ஒருமனதாக முடிவு

கோவை: அடுத்த ஆண்டு முதல் சிங்காநல்லூர் குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

கோவை: அடுத்த ஆண்டு முதல் சிங்காநல்லூர் குளத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பது இல்லை என்று இந்து அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

சிங்காநல்லூர் குளத்தை ஊராக பல்லுயிரியல் பாதுகாப்பு மையம் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. இந்த குளம் நுண்ணுயிரிகள் மற்றும் பறவைகளில் வாழ்விடமாக இருப்பதன் காரணமாக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

அதே நேரத்தில் ஆண்டாண்டு காலமாக விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து இந்த குளத்தில் சிலைகளை கரைக்கும் வழக்கமும் இருந்து வருகிறது. இதனால், குளத்தை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஏற்கனவே கழிவு நீர் கலப்பு, ஆக்கிரமிப்பு என்று தவிக்கும் குளத்தில் சிலைகளையும் கரைக்க வேண்டாமே என்ற கோரிக்கையும் எழுந்தன. இந்த சூழலில், இது தொடர்பான கூட்டம் நேற்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் (சட்டம் &ஒழுங்கு) லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இதில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அப்போது குளத்தின் சூழலை பாதுகாக்கும் பொருட்டு இனி அங்கு விநாயகர் சிலைகளை கரைப்பதில்லை என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு சூழலியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...