நீலகிரி : குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விபத்தில் சென்னையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி : குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விபத்தில் சென்னையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பொள்ளாச்சிக்கு திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதகைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக, சென்னையிலிருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தங்களது இருசக்கர வாகனங்களை கோவைக்கு கொண்டு வந்தனர். திட்டமிட்டபடியே, திருமணம் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிகாலை பொள்ளாச்சியிலிருந்து 3 இருசக்கர வாகனங்களில் 5 பேர் உதகைக்கு சென்று பொழுதைக் கழித்தனர். பின்னர், சுற்றுலாவை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அர்விந்த் (21), அஜித் (21) ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் காந்திபுரம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தது.
இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே இது குறித்து குன்னுார் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், உடலில் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த அரவிந்த் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்கு நண்பர்களுடன் வந்த இடத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பொள்ளாச்சிக்கு திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உதகைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக, சென்னையிலிருந்து பார்சல் சர்வீஸ் மூலம் தங்களது இருசக்கர வாகனங்களை கோவைக்கு கொண்டு வந்தனர். திட்டமிட்டபடியே, திருமணம் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிகாலை பொள்ளாச்சியிலிருந்து 3 இருசக்கர வாகனங்களில் 5 பேர் உதகைக்கு சென்று பொழுதைக் கழித்தனர். பின்னர், சுற்றுலாவை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அர்விந்த் (21), அஜித் (21) ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் காந்திபுரம் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தது.
இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே இது குறித்து குன்னுார் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், உடலில் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மற்றும் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த அரவிந்த் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், விடுமுறைக்கு நண்பர்களுடன் வந்த இடத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.