கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனியார் FL-2 பார்கள் மற்றும் கோவை-கேரள எல்லைப் பகுதிகளில் அதிக கூட்டம் திரண்டது. சுமார் ரூ.8 கோடி விற்பனை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு 215 மதுக்கடைகளை ஒரே நாளில் மூடியதால், மதுபானம் தட்டுப்பாடு காரணமாக தனியார் FL-2 மனமகிழ் மன்றங்கள் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




தமிழகம் முழுவதும் அண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டநிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும் 69 கடைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை வெளிநபர்கள் அல்லது தனியார் ஏஜென்சிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்றுவதற்குப் பதிலாக, விதிமுறைகளுக்கு உட்பட்ட கடைகளே மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தனியார் FL-2 மனமகிழ் மன்றங்களுக்கு லாபம் ஏற்படுத்தும் நோக்கம் உள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 215 மதுக்கடைகள் செயல்பாடு நிறுத்தப்பட்டன. முன்னறிவிப்பு இன்றி இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதால், மதுபானம் வாங்க வந்த மக்கள் திகைப்பில் ஆழ்ந்தனர்.

முன்னறிவிப்பு இன்றி திடீரென 215 கடைகள் மூடப்பட்டதால், டாஸ்மாக் பார்கள் வெறிச்சோடியன.மேலும், பார்களில் தயார் செய்யப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணானதாக பார் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.






இந்த வேலைநிறுத்தத்தால் கோவையில் மட்டும் சுமார் ரூ.8 கோடி மதுபான விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மது கிடைக்காததால் பலர் கேரள எல்லைப் பகுதிகளை நோக்கி திரண்டனர். இதனால் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள கள்ளுக்கடைகள் மற்றும் மதுபானக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. முன்னெச்சரிக்கையாக, கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதைத் தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.






இதற்கிடையில், கோவையில் செயல்பட்டு வரும் தனியார் FL-2 பார்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்க சில பார்கள் அவசரமாக மூடப்பட்டன. இந்த டாஸ்மாக் திடீர் வேலைநிறுத்தம் மாவட்ட நிர்வாகத்திற்கு சவாலாக அமைந்துள்ளது.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...