அமைச்சர் வேலுமணி ஊழல் செய்ததாக செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்

கோவை: டெண்டர் விடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவருக்கு, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தினர் மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: டெண்டர் விடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவருக்கு, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தினர் மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் கோவை மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோமல் கவுதம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பராசனின் நிறுவனம் மற்றும் கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் முறைகேடாக டெண்டர்கள் எடுப்பதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் செய்தி வெளியிட்டார்.,

இது குறித்து கோமல் கூறுகையில், " ஊழல் தொடர்பான செய்தி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெளியானது. அதனைத் தொடர்ந்து கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினர். 'போடி லூசு' என்றும், எனக்கு மிரட்டல் விடுக்கும் தோணியிலும் அவர் பேசினார். மேலும், நான் அவரிடம் லஞ்சம் கேட்டதாகவும் கட்டுக்கதைகளை அடுக்கினார்.

ஊழல் புகாரில் சிக்கி செய்தி வெளியானதும் என் மீது குற்றச்சாட்டை திணிக்கப் பார்க்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவர்களின் ஊழல் தொடர்பான செய்திகளை நான் வெளியிட்டு வருகிறேன். அதற்காக என் மீது அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவர்கள் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றால் சட்டத்தின் வாயிலாக அணுகலாம். அதனைவிடுத்து தற்போது மிரட்டல் விடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த மிரட்டல் என்னை ஒருபோதும் தடுத்துவிடாது.

இது குறித்து கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் கூறுகையில், "அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்தியாளர் என் மீது குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தும், அவர்கள் மேலும், இதே போல செயல்படுகின்றனர். இந்த நிறுவனத்தைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன. 5 மாநிலங்களில் கான்டிரேக்ட் எடுத்து வருகிறோம். இதனால் எனது வருமானம் 40 சதவீதமாவது உயராதா? குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் உள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்." என்றார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...