அமைச்சர் வேலுமணி ஊழல் செய்ததாக செய்தி வெளியிட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்

கோவை: டெண்டர் விடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவருக்கு, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தினர் மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: டெண்டர் விடுவதில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி வெளியிட்டது. இந்த செய்தியை பதிவு செய்த பெண் பத்திரிகையாளர் கோமல் கவுதம் என்பவருக்கு, ஊழலில் தொடர்புடைய ஒரு நிறுவனத்தினர் மிரட்டல் விடுப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் கோவை மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தவர் கோமல் கவுதம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பராசனின் நிறுவனம் மற்றும் கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் முறைகேடாக டெண்டர்கள் எடுப்பதாகவும் ஊழலில் ஈடுபடுவதாகவும் செய்தி வெளியிட்டார்.,

இது குறித்து கோமல் கூறுகையில், " ஊழல் தொடர்பான செய்தி நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெளியானது. அதனைத் தொடர்ந்து கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் எனக்கு குறுஞ்செய்திகளை அனுப்பினர். 'போடி லூசு' என்றும், எனக்கு மிரட்டல் விடுக்கும் தோணியிலும் அவர் பேசினார். மேலும், நான் அவரிடம் லஞ்சம் கேட்டதாகவும் கட்டுக்கதைகளை அடுக்கினார்.

ஊழல் புகாரில் சிக்கி செய்தி வெளியானதும் என் மீது குற்றச்சாட்டை திணிக்கப் பார்க்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் அவர்களின் ஊழல் தொடர்பான செய்திகளை நான் வெளியிட்டு வருகிறேன். அதற்காக என் மீது அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவர்கள் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றால் சட்டத்தின் வாயிலாக அணுகலாம். அதனைவிடுத்து தற்போது மிரட்டல் விடுக்கும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த மிரட்டல் என்னை ஒருபோதும் தடுத்துவிடாது.

இது குறித்து கே.சி.பி எஞ்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திரபிரகாஷ் கூறுகையில், "அடிப்படை ஆதாரம் இல்லாமல் செய்தியாளர் என் மீது குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தும், அவர்கள் மேலும், இதே போல செயல்படுகின்றனர். இந்த நிறுவனத்தைத் தொடங்கி 20 ஆண்டுகள் ஆகின்றன. 5 மாநிலங்களில் கான்டிரேக்ட் எடுத்து வருகிறோம். இதனால் எனது வருமானம் 40 சதவீதமாவது உயராதா? குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமே இல்லாமல் உள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...