214 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து குப்புசுவாமிநாயுடு மருத்துவமனை மருத்துவர்கள் உலக சாதனை

கோவை : பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.



கோவை : பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 



திண்டுக்கல்லைச் சேர்ந்த பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றுவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தது. இதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் கோவையைச் சேர்ந்த ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் பித்தப்பையில் கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர், அதனை லேபரோஸ்கோபிக் சோல்சிஸ்டெக்டோமி அறுவை சிகிச்சையின் மூலம் அதனை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். 

ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்கு பச்சிளம் குழந்தையின் உடல் ஒத்துழைப்பது மருத்துவர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இதைத் தொடர்ந்து, தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவர்கள் கடந்த 6-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்கு ஆரோக்கியத்துடன் உள்ளது. 

ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனை மருத்துவர்களின் இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை கின்னஸ் சாதனைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பெல்காமில் கடந்த ஆண்டு பிறந்து 244 நாட்கள் ஆன குழந்தைக்கு லேபரோஸ்கோபிக் சோல்சிஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை செய்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...