கோவை : பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கோவை : பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் மருத்துவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த பிறந்து 214 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வயிற்றுவலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தது. இதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் கோவையைச் சேர்ந்த ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் பித்தப்பையில் கற்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர், அதனை லேபரோஸ்கோபிக் சோல்சிஸ்டெக்டோமி அறுவை சிகிச்சையின் மூலம் அதனை நீக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால், இந்த அறுவை சிகிச்சைக்கு பச்சிளம் குழந்தையின் உடல் ஒத்துழைப்பது மருத்துவர்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இதைத் தொடர்ந்து, தினேஷ்குமார் தலைமையிலான மருத்துவர்கள் கடந்த 6-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்கு ஆரோக்கியத்துடன் உள்ளது.
ஜி. குப்புசுவாமி நாயுடு நினைவு மருத்துவமனை மருத்துவர்களின் இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை கின்னஸ் சாதனைக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, பெல்காமில் கடந்த ஆண்டு பிறந்து 244 நாட்கள் ஆன குழந்தைக்கு லேபரோஸ்கோபிக் சோல்சிஸ்டெக்டோமி அறுவை சிகிச்சை செய்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.