கோவை: கோவையில் பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
கோவை: கோவையில் பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நிறுவன அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக கோவை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அந்நிறுவன உரிமையாளரான இந்துமதிக்கு சொந்தமான வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 7 மணிநேரம் நடந்த சோதனைக்கு பின் அங்கிருந்து இரண்டு பிளாஸ்டிக் பைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வங்கிகளில் போலி ஆவணங்களை காட்டி கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக பிரபல இந்துமதி ரீஃபைனரீஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் நிறுவன அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில், இதன் ஒரு பகுதியாக கோவை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அந்நிறுவன உரிமையாளரான இந்துமதிக்கு சொந்தமான வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 7 மணிநேரம் நடந்த சோதனைக்கு பின் அங்கிருந்து இரண்டு பிளாஸ்டிக் பைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.