கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் காலை முதல் மாலை வரை நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் பங்கேற்று பரிசல் பயணம் செல்லவும், பசுமை காடுகளையும், அதில் வாழும் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் செய்யலாம்.
இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதன் பின்னரும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 57,000 கன அடி வரை உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதனால், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்தது.
மேலும், ஆன்லைன் மூலம் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செய்யப்பட்டு வந்த முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இருவார காலமாக மழையின் அளவு குறைந்து அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து, சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி சீர் செய்யப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. வரும் திங்கள் முதல் வழக்கம் போல் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் வனத்துறையிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் காலை முதல் மாலை வரை நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் பங்கேற்று பரிசல் பயணம் செல்லவும், பசுமை காடுகளையும், அதில் வாழும் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் செய்யலாம்.
இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதன் பின்னரும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 57,000 கன அடி வரை உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இதனால், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்தது.
மேலும், ஆன்லைன் மூலம் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செய்யப்பட்டு வந்த முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த இருவார காலமாக மழையின் அளவு குறைந்து அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து, சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி சீர் செய்யப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. வரும் திங்கள் முதல் வழக்கம் போல் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் வனத்துறையிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.