பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடக்கம்: திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு

கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: பில்லூர் அணைக்கான நீர்வரத்து குறைந்ததால் பரளிக்காடு சூழல் சுற்றுலா மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.



மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் வனத்துறை சார்பில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. அடர்ந்த வனத்தின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் காலை முதல் மாலை வரை நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் பங்கேற்று பரிசல் பயணம் செல்லவும், பசுமை காடுகளையும், அதில் வாழும் வன உயிரினங்கள் மற்றும் பறவைகளை கண்டு ரசிக்கவும் செய்யலாம். 

இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த மாதம் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதன் பின்னரும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. 

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 57,000 கன அடி வரை உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. 

இதனால், பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி முழுவதுமாக நீரில் மூழ்கியது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்தது. 

மேலும், ஆன்லைன் மூலம் பரளிக்காடு சூழல் சுற்றுலாவிற்கு செய்யப்பட்டு வந்த முன்பதிவும் நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த இருவார காலமாக மழையின் அளவு குறைந்து அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து, சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பகுதி சீர் செய்யப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. வரும் திங்கள் முதல் வழக்கம் போல் சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் வனத்துறையிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...