நீலகிரி: குன்னூர் - கோத்தகிரி சாலையில் உலா வரும் கரடி கூட்டத்தால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி: குன்னூர் - கோத்தகிரி சாலையில் உலா வரும் கரடி கூட்டத்தால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாளுக்கு நாள் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இப்பகுதியில் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். அதேபோல, தேயிலை தோட்ட விவசாயிகளும் உயிர்பயத்துடனேயே பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், குன்னூர் - கோத்தகிரி சாலையில் குட்டியுடன் தாய் கரடி அவ்வப் போது சுற்றித் திரிவதும், சாலைகளை கடப்பதுமாக இருந்து வருகிறது. எனவே, இவ்வழியாக வாகனத்தில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே, அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாகவே, சாலைகளில் சுற்றித் திரியும் கரடிகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.