திருப்பூரில் நொய்யல் ஆற்றை காப்பதில் அதிகாரிகள் அலட்சியம் : அணைக்கட்டுகளில் சாயக்கழிவுகளால் நுரை பொங்கும் அவலம்

திருப்பூர்: சாயப் பட்டறைகளிடம் இருந்து நொய்யல் ஆற்றை காக்கத் தவறிய அதிகாரிகளால், மாணிக்காபுரம், காசிபாளையம் உள்ளிட்ட அணைக்கட்டுகளில் சாயக்கழிவுகளால் நுரை பொங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: சாயப் பட்டறைகளிடம் இருந்து நொய்யல் ஆற்றை காக்கத் தவறிய அதிகாரிகளால், மாணிக்காபுரம், காசிபாளையம் உள்ளிட்ட அணைக்கட்டுகளில் சாயக்கழிவுகளால் நுரை பொங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

தொழில் நகரமான திருப்பூரின் பிரதான தொழில் பின்னலாடை உற்பத்தி ஆகும். அதற்காக, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சாய சலவை பட்டறைகள் மற்றும் 1,000-க்கும் அதிகமான உற்பத்தி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில், சாய ஆலைகளை அடிப்படையாகக் கொண்டே மற்ற உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 

பெரும்பாலும் நொய்யல் ஆற்றங்கரையில் செயல்பட்டு வரும் ஆலைகள் சுத்திகரிப்புக்கு ஆகும் செலவை குறைக்கும் விதமாக, சாயக்கழிவு நீரை சாக்கடை மற்றும் சிறிய ரக குழாய்கள் மூலமாக நேரடியாக நொய்யல் ஆற்றில் கலந்து வருகின்றனர். 

இதனால், நொய்யல் பெயரளவில் மட்டும் தூய்மை என்றும், நிஜத்தில் மாசுபட்டும் வருகிறது. இந்த செயலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். 

ஆனால், திருப்பூர் நொய்யல் ஆற்றின் மாணிக்காபுரம், காசிபாளையம் உள்ளிட்ட அணைக்கட்டுகளில் நுரை பொங்கும் அளவிற்கு சாயக் கழிவுநீர் ஆலைகளால் நீரில் கலக்கப்படுகின்றன. இது குறித்து பலமுறை புகார் அளித்தும், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...