திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது.
திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது.
திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டனில் வசித்து ஜெயப்பிரகாஷ் பூபதி தனியார் டையிங்க் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பூபதி பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்தில் அவரது இருகண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் பூபதியின் மனைவி சுமதி விபத்திற்கு காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று திருப்பூரில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டனில் வசித்து ஜெயப்பிரகாஷ் பூபதி தனியார் டையிங்க் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பூபதி பலத்த காயமடைந்தார்.

இந்த விபத்தில் அவரது இருகண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் பூபதியின் மனைவி சுமதி விபத்திற்கு காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இன்று திருப்பூரில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.