திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களை இழந்தவருக்கு லோக் அதாலத் மூலம் 1 கோடி இழப்பீடு

திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் சாலை விபத்தில் இரு கண்களையும் இழந்தவருக்கு லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் 1 கோடி ரூபாய்க்கான காசோலை இழப்பீடாக வழங்கப்பட்டது. 

திருப்பூர் காங்கேயம் சாலை அமர்ஜோதி கார்டனில் வசித்து ஜெயப்பிரகாஷ் பூபதி தனியார் டையிங்க் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது பெருமாநல்லூர் சாலையில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பூபதி பலத்த காயமடைந்தார். 



இந்த விபத்தில் அவரது இருகண்களும் பார்வை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயபிரகாஷ் பூபதியின் மனைவி சுமதி விபத்திற்கு காரணமான வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந்த நிலையில், இன்று திருப்பூரில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் இரு தரப்பினருக்கும் சமரசம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் பூபதிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...