கோவையில் நிதி ஒதுக்கீடு செய்தும், தூர்வாரப்படாத ராஜவாய்க்கால்

கோவை: கோவையில் பிரதான வாய்க்காலான ராஜவாய்க்காலை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை எந்தவித ஆரம்பகட்ட பணிகளை கூட மேற்கொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் பிரதான வாய்க்காலான ராஜவாய்க்காலை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை எந்தவித ஆரம்பகட்ட பணிகளை கூட மேற்கொள்ளாமல் இருப்பது சமூக ஆர்வலர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் 10 அடி அகலம் கொண்ட ராஜ வாய்க்காலில் பாய்ந்தோடும் நொய்யல் ஆற்று நீர், முத்துகவுண்டம்பாளையம்புதூர் குளத்தின் மூலம் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. இந்தக் கால்வாயின் மூலம் 360 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் 100 விவசாய குடும்பங்கள் பலன் பெறுகின்றன. இதனைப் பயன்படுத்தி சோளம், தென்னை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இந்த நிலையில், இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து புற்கல் மற்றும் மண் போன்றவை மூடிவிட்டன. 



இது குறித்து உள்ளூவாசி வி. வாசுதேவன் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் இதனை வெற்றிகரமாக தூர்வாரி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே, இந்த வாய்க்காலை தூர்வாரக் கோரி உரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகப் பதிலளிக்கின்றனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு செய்தும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இந்த வாய்க்காலை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை ஆரம்பகட்ட பணிகளே மேற்கொள்ளாமல் இருப்பது அண்மையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தெரிய வந்தது," இவ்வாறு அவர் கூறினார். 



இந்த வாய்க்காலை தூர்வார மகாத்மா காந்தி திட்டத்திற்கு ரூ. 11,43,000 ஒதுக்கப்பட்டுள்ளது. 8,273 நாட்களில் நாள்தோறும் ரூ.205 ஊதியம் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதி இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவிதமான கான்கிரீட் தளமும் அமைக்கவில்லை. இதனால், அதே நிலையில் தான் இந்த வாய்க்கால் உள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...