கோவை : சாய்பாபாகாலனி அருகே குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சாய்பாபாகாலனி அருகே குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய்பாபாகாலனி குப்பகோணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஷான் பாஷா (45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் சப்ரின் பேகம் (15) குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி மாணவி அவருடைய சக மாணவிகளுடன் சிரித்துப் பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தலைமையாசிரியை சகுந்தலா மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இருப்பினும், மாணவி சப்ரின் பேகம் ஆசிரியர் திட்டியதால் மிகுந்த மனவருத்தத்துடன் நேற்று வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு செல்லும் போது வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி வளாகத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். பின்னர், விசாரித்த போது மாணவி மூட்டைப்பூச்சி மருந்தை குடித்திருந்தது தெரியவந்தது. இதனால், அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து சப்ரின் பேகத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது, அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சாய்பாபாகாலனி குப்பகோணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஷான் பாஷா (45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் சப்ரின் பேகம் (15) குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி மாணவி அவருடைய சக மாணவிகளுடன் சிரித்துப் பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தலைமையாசிரியை சகுந்தலா மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர்.
இருப்பினும், மாணவி சப்ரின் பேகம் ஆசிரியர் திட்டியதால் மிகுந்த மனவருத்தத்துடன் நேற்று வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு செல்லும் போது வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி வளாகத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். பின்னர், விசாரித்த போது மாணவி மூட்டைப்பூச்சி மருந்தை குடித்திருந்தது தெரியவந்தது. இதனால், அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து சப்ரின் பேகத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது, அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.