தலைமை ஆசிரியர் திட்டியதால் கோவை அரசுப் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

கோவை : சாய்பாபாகாலனி அருகே குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : சாய்பாபாகாலனி அருகே குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திட்டியதால், 10-ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாய்பாபாகாலனி குப்பகோணம்புதூர் பகுதியில் வசித்து வருபவர் ஷான் பாஷா (45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரின் மகள் சப்ரின் பேகம் (15) குப்பகோணம் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி மாணவி அவருடைய சக மாணவிகளுடன் சிரித்துப் பேசி கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தலைமையாசிரியை சகுந்தலா மாணவிகளை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பள்ளி முடிந்ததும் மாணவிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர். 

இருப்பினும், மாணவி சப்ரின் பேகம் ஆசிரியர் திட்டியதால் மிகுந்த மனவருத்தத்துடன் நேற்று வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலையில் பள்ளிக்கு செல்லும் போது வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தையும் உடன் எடுத்துச் சென்றுள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி வளாகத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். பின்னர், விசாரித்த போது மாணவி மூட்டைப்பூச்சி மருந்தை குடித்திருந்தது தெரியவந்தது. இதனால், அருகில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து சப்ரின் பேகத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

தற்போது, அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...