திருப்பூர்: தாராபுரம் நகர கூட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுக்கள் பதிந்து முறைகேட்டில் ஈடுபட்ட வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட அ.ம.மு.க.,வினர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்: தாராபுரம் நகர கூட்டுறவு தேர்தலில் அ.தி.மு.க.,வினர் கள்ள ஓட்டுக்கள் பதிந்து முறைகேட்டில் ஈடுபட்ட வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட அ.ம.மு.க.,வினர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் பல்வேறு வன்முறை காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மூன்றாவது முறையாக கடந்த 1-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. பிறகு 3-ம் தேதி அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவுகள் அன்று இரவே அறிவிக்கப்பட்டன. அதில், அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் வாக்கு செலுத்தும் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அ.தி.மு.க., தி.மு.க., பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கூறிவந்தனர். இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.
இந்த நிலையில், தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு வகையான குளறுபடிகளும், ஒரே நபர்கள் ஐந்துக்கு மேற்பட்ட முறை வாக்களிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது, தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து அ.தி.மு.க., அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் பல்வேறு வன்முறை காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு மூன்றாவது முறையாக கடந்த 1-ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. பிறகு 3-ம் தேதி அன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

இந்த தேர்தல் முடிவுகள் அன்று இரவே அறிவிக்கப்பட்டன. அதில், அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் வாக்கு செலுத்தும் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அ.தி.மு.க., தி.மு.க., பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கூறிவந்தனர். இதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை.
இந்த நிலையில், தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு வகையான குளறுபடிகளும், ஒரே நபர்கள் ஐந்துக்கு மேற்பட்ட முறை வாக்களிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது, தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த வீடியோ பதிவுகளை ஆதாரமாக வைத்து அ.தி.மு.க., அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.