கோவையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம்

கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : நீதிமன்றத்தை அவமதித்தற்காக மத்திய அரசு வழக்கறிஞருக்கு ரூ. 200 அபராதம் விதித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 30-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பு வழக்கறிஞராக ரேணுகாதேவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹெராயின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகாததைத் தொடர்ந்து சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பாக வாதிடும் வழக்கறிஞர் ரேணுகாதேவி நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதையடுத்து, அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், இந்த நோட்டீஸிக்கு பதில் அளிக்காததால் மத்திய அரசு வழக்கறிஞர் ரேணுகாதேவிக்கு ரூ. 200 அபராதம் விதித்து, ஒரு வாரத்திற்குள் செலுத்த நீதிபதி சஞ்சய்பாபா உத்தரவிட்டார். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...