கோவையில் மரம் வெட்டப்படுவதை தட்டிக் கேட்ட சமூக ஆர்வலருக்கு மிரட்டல்

கோவை : லட்சுமி மில்ஸ் அருகே மரங்களை வெட்டிய குடியிருப்புவாசியிடம் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : லட்சுமி மில்ஸ் அருகே மரங்களை வெட்டிய குடியிருப்புவாசியிடம் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை - அவினாசி சாலையில் உள்ள லட்சுமி பகுதியில் ஆனந்தாஸ் ஓட்டல் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்பைச் சேர்ந்த பகுதிவாசி ஒருவர் அங்கிருந்த இரண்டு வேப்ப மரங்களை வெட்டியுள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற ஓசை அமைப்பைச் சேர்ந்த சையத், மரம் வெட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால், மரம் வெட்டுவது தங்களது சொந்த விருப்பம், எங்களிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை என அந்த குடியிருப்புவாசி பதிலளித்துள்ளார். 



அப்போது, அங்கிருந்த ஒருசிலர், தங்களை அரசு அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டதுடன், மரம் வெட்டப்படுவது குறித்து வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் சையத்தின் செல்போனை பறித்துக் கொண்டனர். இதனால், சமூக நலன் தொடர்பான செயல்களுக்கு ஆதரவான சமூக ஆர்வலர்களின் கேள்வி கேட்கும் உரிமைகளையும் அதிகாரிகள் பறித்துக் கொண்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...