கோவை : பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தவில்லை எனில் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை : பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்தவில்லை எனில் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நாட்டுப் பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவைகளால் பொது சுகாதாரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகின்றன. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்ப்பவர்கள் வரும் 15-ம் தேதிக்குள் உடனடியாக பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், விடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு பொது சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை வளர்க்கும் உரிமையாளர்களின் மீது மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.