நீலகிரியில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் - தீயணைப்புத் துறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கம் கூடலூர் போன்ற பகுதிகளில் அதிகம் இருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் உதகை குன்னூர் போன்ற பகுதிகளில் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி சுப்ரமணி, இன்று குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு செய்தார்.



இது குறித்து அவர் கூறுகையில், "பருவமழைக் காலங்களில் சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது சவாலான காரியமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள மாவட்டம் முழுவதும் தற்போது 'பவர்-ஷா' என்ற மரம் அறுக்கும் நவீன கருவிகள் 14 உள்ளன. மேலும், அதி நவீன 4 கருவிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள மாவட்ட தீயணைப்புத் துறை தயாராக உள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...