தொழில் சிறப்பு விருதை பெற்றது கோவையில் உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம்

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக 2018-க்கான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகத்திற்கு ரோட்டரி கிளப் சார்பாக 2018-க்கான தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் நாட்டின் தனித்துவம் வாய்ந்த அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் கடந்த 1918-ல் ஹேமில்டன் காவலர் கூட்டுறவு விடுதி சங்கமாக இருந்தது.

பின்னர், பல ஆண்டுகளாக பயனற்று பாழடைந்து கிடந்தது. தொடர்ந்து, முன்னாள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜின் முயற்சியால் மறு சீரமைக்கப்பட்டு காவலர் அருங்காட்சியகமாக உருவானது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.



இந்த அருங்காட்சியகத்தில் பணி ஆயுதங்கள், விருதுகள், பதக்கங்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், காவலர்களின் பதவிகளை அறியும் விதமாக காவலர் சீருடைகள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படும் உபகரணங்கள் என பல வகையான ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.,க்கு அப்போதைய ரோட்டரி கிளப் கவர்னர் வரதராஜ் வழங்கிய வெள்ளி வாள் இன்றும் பாதுகாப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல விடுதலைப் புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பலும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்படி சிறப்பு வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தை பெருமைப்படுத்தும் விதமாக ரோட்டரி கிளப் சார்பாக தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையாளர் சுஜித்குமார் இந்த விருதினை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...