அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து உரசியதில் முதியவர் படுகாயம்

கோவை : திருச்சி சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மீது உரசியதில், முதியவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கோவை : திருச்சி சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மீது உரசியதில், முதியவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் உதயக்குமார் என்ற முதியவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, போத்தனூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்பகுதி முதியவரின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தில் இருந்து தலைக்குப்புற விழுந்த முதியவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது. 



உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அதிர்ச்சி ஊட்டும் வகையில் ஹாரன் சத்தம் அடித்ததால் தான் முதியவர் நிலை தடுமாறி இந்த விபத்தில் சிக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனவே, தனியார் பேருந்துகளின் ஒலி மற்றும் வேகத்தின் அளவைப் போக்குவரத்து காவலர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...