கோவை : திருச்சி சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மீது உரசியதில், முதியவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை : திருச்சி சாலையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனம் மீது உரசியதில், முதியவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் உதயக்குமார் என்ற முதியவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, போத்தனூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்பகுதி முதியவரின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தில் இருந்து தலைக்குப்புற விழுந்த முதியவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிர்ச்சி ஊட்டும் வகையில் ஹாரன் சத்தம் அடித்ததால் தான் முதியவர் நிலை தடுமாறி இந்த விபத்தில் சிக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனவே, தனியார் பேருந்துகளின் ஒலி மற்றும் வேகத்தின் அளவைப் போக்குவரத்து காவலர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் இன்று மாலை இரு சக்கர வாகனத்தில் உதயக்குமார் என்ற முதியவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, போத்தனூர் நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்பகுதி முதியவரின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதனால், வாகனத்தில் இருந்து தலைக்குப்புற விழுந்த முதியவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிர்ச்சி ஊட்டும் வகையில் ஹாரன் சத்தம் அடித்ததால் தான் முதியவர் நிலை தடுமாறி இந்த விபத்தில் சிக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். எனவே, தனியார் பேருந்துகளின் ஒலி மற்றும் வேகத்தின் அளவைப் போக்குவரத்து காவலர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.