மாணவரை காரணமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து சக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை கல்லூரியில் பயின்று வரும் மாணவரை காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து சகமாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை கல்லூரியில் பயின்று வரும் மாணவரை காரணம் இன்றி இடைநீக்கம் செய்ததைக் கண்டித்து சகமாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலிபாளையம் பகுதியில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பின்னலாடை கல்லூரி (நிப்ட்-டி) இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெளி மாநிலத்தவர்கள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த திருவேங்கடம் எனும் மாணவரை கடந்த மாதம் காரணமின்றி கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவனையும், அவரது பெற்றோரையும் அவமதித்ததாகவும், தகாத வார்த்தைகளால் கல்லூரி நிர்வாகத்தினர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் இன்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கல்லூரியின் முதல்வர் தயாளன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். 



இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கல்லூரி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், மிரட்டுவதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டினார். தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரிக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...