சென்னை: குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: குட்கா வழக்கில் அதிபர் மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ ரெய்டு நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீடு உள்ளிட்ட 40 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குட்கா அதிபர் மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், அவரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையிலும் இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், அதே ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

அப்போது விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர்.கே இடைத்தேர்தலுக்கு ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம், அதை எந்தெந்த அமைச்சர்களுக்குப் பிரித்து வழங்குவது உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் அமைச்சர் வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.