உதகை மாவட்ட நீதிமன்றம் சார்பில் கேரளாவிற்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

நீலகிரி : உதகை மாவட்ட நீதி மன்றம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட நீதிபதி வடமலை இன்று அனுப்பி வைத்தார்.


நீலகிரி : உதகை மாவட்ட நீதி மன்றம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட நீதிபதி வடமலை இன்று அனுப்பி வைத்தார். 

கேரளாவில் பெய்த கனமழை பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல பேர் உணவின்றியும், உடைகள் இன்றியும் தவித்து வந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட நீதி மன்றம் சார்பில் 3 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் அங்குள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 



கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. இங்குள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க பல்வேறு அமைப்பினர் நீலகிரியில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், உதகை மாவட்ட நீதிமன்றம் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கேரளாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகள், போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் வாளிகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், ஆடைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை மாவட்ட நீதிபதி வடமலை வழியனுப்பி வைத்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...