கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரு கல்வி குழுமம் சார்பில் வழங்கப்பட்டது.
கோவை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நேரு கல்வி குழுமம் சார்பில் வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. இதனால், மாநிலத்தை சீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நேரு கல்வி குழுமங்களின் நிர்வாகத்தினர் மற்றும் அலுவலர்கள் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். உடன் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.அனிருதன் மற்றும் நேரு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர்.அம்பிகா தேவி ஆகியோர் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக கேரள மாநிலமே ஸ்தம்பித்தது. இதனால், மாநிலத்தை சீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு தரப்பினர் உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நேரு கல்வி குழுமங்களின் நிர்வாகத்தினர் மற்றும் அலுவலர்கள் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான பி.கிருஷ்ணகுமார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் வழங்கினார். உடன் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பி.அனிருதன் மற்றும் நேரு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர்.அம்பிகா தேவி ஆகியோர் உள்ளனர்.