கோவை: கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக அதிகாரி வி. அருண் ராயை தமிழக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
கோவை: கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக அதிகாரி வி. அருண் ராயை தமிழக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 1-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தற்போது 28,33,509 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,05,003 ஆண்களும், 14,28,218 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 288 பேரும் அடங்குவர். கோவை மாவட்டத்தில் 1.1.2019-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் செய்ய வி. அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பட்டியலையும் திருத்தம் செய்வார் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 1-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தற்போது 28,33,509 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,05,003 ஆண்களும், 14,28,218 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 288 பேரும் அடங்குவர். கோவை மாவட்டத்தில் 1.1.2019-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் செய்ய வி. அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பட்டியலையும் திருத்தம் செய்வார் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.