கோவையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அதிகாரி நியமனம்

கோவை: கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக அதிகாரி வி. அருண் ராயை தமிழக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

கோவை: கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக அதிகாரி வி. அருண் ராயை தமிழக தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. 



அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் வகையில் தமிழக தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 1-ம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தற்போது 28,33,509 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 14,05,003 ஆண்களும், 14,28,218 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 288 பேரும் அடங்குவர். கோவை மாவட்டத்தில் 1.1.2019-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கோவையில் உள்ள வாக்காளர்களின் பட்டியலில் திருத்தம் செய்ய வி. அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் வாக்காளர் பட்டியலையும் திருத்தம் செய்வார் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...