மலுமிச்சம்பட்டி கண்டிகவுண்டன் குட்டையை தூய்மைப்படுத்திய நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்

கோவை: மலுமிச்சம்பட்டி அருகே உள்ள கண்டிகவுண்டன் குட்டையை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினர்.

கோவை: மலுமிச்சம்பட்டி அருகே உள்ள கண்டிகவுண்டன் குட்டையை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினர்.



இது தொடர்பாக அக்கட்சியினர் வெளியிட்ட குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

கிணத்துக்கடவு தொகுதி - மலுமிச்சம்பட்டி போடிபாளையம் சாலையில் நீர்த்தேக்கத்திற்காக முன்னோர்கள் பயன்படுத்திய கண்டிகவுண்டன் குட்டை புதர் மண்டி, நெகழிக்கழிவுகளாலும், சீமைக்கருவேல மரத்தாலும் சூழ்ந்து சிறு அணை இருப்பதே தெரியாமல் இருந்தது.

சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பிற்குத் தேவையான நிலத்தடி நீரை கொடுக்கவல்ல இந்த குட்டையை நீர் தேக்கி இயற்கைக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் விதமாக மீட்டுருவாக்க பணியில் நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறை அனைத்து உறவுகள் முதல் நாள் களப்பணியை செய்தது.



நாம் தமிழர் கட்சி செயற்பாட்டு வரைவின்படி நீர்நிலைகளை மீட்டுருவாக்கி மழை நீரை சேமித்து நீர்வளத்தைப் பெருக்கும் விதமாக ஆட்சியில் இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில் நாம் தமிழர் கட்சி.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த முதல் வார களப்பணியில் குட்டையில் இருந்த சீமைக் கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டன.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...