வால்பாறையில் ஆற்றை ஆக்கிரமித்து பள்ளி கட்டப்பட்டதாக புகார்

கோவை: வால்பாறையில் பியுலா என்ற தனியார் பள்ளி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: வால்பாறையில் பியுலா என்ற தனியார் பள்ளி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் பியுலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளி நடுமலை ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்திலேயே அதிக மழை பெறும் பகுதியாக வால்பாறை உள்ள நிலையில், கனமழை காலங்களில் பள்ளிக் கட்டிடம் தண்ணீரில் மூழ்குவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.



முறையான அனுமதியின்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். குழந்தைகள் நலன் கருதி விபத்துகள் நடைபெறும் முன் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...