கோவை: வால்பாறையில் பியுலா என்ற தனியார் பள்ளி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கோவை: வால்பாறையில் பியுலா என்ற தனியார் பள்ளி ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் பியுலா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளி நடுமலை ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்திலேயே அதிக மழை பெறும் பகுதியாக வால்பாறை உள்ள நிலையில், கனமழை காலங்களில் பள்ளிக் கட்டிடம் தண்ணீரில் மூழ்குவதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முறையான அனுமதியின்றி பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர். குழந்தைகள் நலன் கருதி விபத்துகள் நடைபெறும் முன் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.