அலைக்கழிக்கும் அலுவலர்களை கண்டித்து உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருப்பூர் : பத்திரப்பதிவு கிரயம், சொத்து வாங்குதல் போன்றவற்றிற்காக வருபவர்களை அலைக்கழிக்கும் அலுவலர்களை கண்டித்து உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: பத்திரப்பதிவு கிரயம், சொத்து வாங்குதல் போன்றவற்றிற்காக வருபவர்களை அலைக்கழிக்கும் அலுவலர்களை கண்டித்து உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

திருப்பூா் மாவட்டம் உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு கிரயம், சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை போன்றவற்றிற்கு நாள்தோறும் வார நாட்களில் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஆன்லைன் பத்திரப்பதிவு முறையால் நேரம் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுவதாக ஏராளமானோர் கூறி வருகின்றனர். 



இந்த நிலையில், உடுமலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருபவர்களை அலைக்கழிப்பதாகவும், மரியாதை குறைவாக அதிகாரிகளால் நடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், அந்த அதிகாரிகளைக் கண்டித்து கண்ணமநாயக்கனூா் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தமிழக அரசு இதுபோன்ற ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...