பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை: கல்லூரி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை: கல்லூரி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞருக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2015-ம் ஆண்டு காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கல்லூரிக்காக நின்றுகொண்டிருந்த நந்திதா என்ற மாணவிடம், அவரது உறவினர் விஜயகுமார் (27) தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4-ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இது தொடர்பான வழக்கு கோவை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்த போது, விஜயகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வருகிறது. பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. இதுபோன்ற தண்டனைகள், பெண்களிடம் தவறாக நடப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...