கோவை : பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரிக்கால் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 144 பேருக்கு நிர்வாகம் பகுதி கதவடைப்பு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு தொழிலாளர்கள் பலருக்கு பணப்பிடிப்பு மற்றும் இதர தண்டனைகளை வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் மூலம் கடந்த 21-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையம் இதுவரை இப்பிரச்சனையில் தலையிட வில்லை.
இந்த நிலையில், பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பிரிக்கால் நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பெறும் தொழிற்சங்கத்தை தேர்வு செய்து பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். நிபந்தனையற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே ஏற்படுத்திட வேண்டும். ஊழியர்களின் பகுதி கதவடைப்பு மற்றும் பணப்பிடிப்பு, இதர தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டியூ., எல்.பி.எப்,ஐ., என்.டி.சி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பிரிக்கால் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 144 பேருக்கு நிர்வாகம் பகுதி கதவடைப்பு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு தொழிலாளர்கள் பலருக்கு பணப்பிடிப்பு மற்றும் இதர தண்டனைகளை வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் மூலம் கடந்த 21-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர் நல ஆணையம் இதுவரை இப்பிரச்சனையில் தலையிட வில்லை.
இந்த நிலையில், பிரிக்கால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆதரித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பிரிக்கால் நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை பெறும் தொழிற்சங்கத்தை தேர்வு செய்து பேச்சு வார்த்தை நடத்த முன்வர வேண்டும். நிபந்தனையற்ற ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே ஏற்படுத்திட வேண்டும். ஊழியர்களின் பகுதி கதவடைப்பு மற்றும் பணப்பிடிப்பு, இதர தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டியூ., எல்.பி.எப்,ஐ., என்.டி.சி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.