கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானம், தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது.
கோவை: பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானம், தொடர்ந்து 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதைப் பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கோவை மாவட்ட அளவில் நடத்தப்படும் பெரும்பாலான போட்டிகள் பி.எஸ்-ஜி., மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த மைதானம், பராமரிப்பு, தோற்றம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறது. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதை பி.எஸ்-ஜி., கல்வி நிறுவனமே பெற்றுள்ளது.
இந்த நிலையில், 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதும் பி.எஸ்.ஜி., நிர்வாகத்திற்கே கிடைத்துள்ளது. இந்த விருதை பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டி. பழனிசாமிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் கே.எஸ்., விஸ்வநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியத் தலைவர் டி. லட்சுமிநாராயணசாமி, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவி செயலாளர் எஸ். மார்ட்டின் ராஜ் ஆகியோர் இருந்தனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கோவை மாவட்ட அளவில் நடத்தப்படும் பெரும்பாலான போட்டிகள் பி.எஸ்-ஜி., மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த மைதானம், பராமரிப்பு, தோற்றம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கி வருகிறது. இதனால், கடந்த 6 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதை பி.எஸ்-ஜி., கல்வி நிறுவனமே பெற்றுள்ளது.
இந்த நிலையில், 7-வது ஆண்டாக சிறந்த மைதான பராமரிப்பிற்கான விருதும் பி.எஸ்.ஜி., நிர்வாகத்திற்கே கிடைத்துள்ளது. இந்த விருதை பி.எஸ்.ஜி., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் டி. பழனிசாமிக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அலுவலர் கே.எஸ்., விஸ்வநாதன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், கோவை மாவட்ட கிரிக்கெட் வாரியத் தலைவர் டி. லட்சுமிநாராயணசாமி, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் உதவி செயலாளர் எஸ். மார்ட்டின் ராஜ் ஆகியோர் இருந்தனர்.