கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் அமைப்பின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா நடைபெற்றது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் அமைப்பின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கேன்சர் வார்டு புதுப்பிக்கப்பட்டதன் தொடக்க விழா நடைபெற்றது.

கோவை அரசு மருத்துவமனையில் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அதேபோல, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் முக்கியமான மூன்று சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதனால், இந்த கேன்சர் வார்டிற்கு மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், இந்த கேன்சர் வார்டில் போதுமான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்கள் இல்லாத நிலை இருந்தது.

இந்த நிலையில், ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் ஜெயின் அமைப்பினர் கேன்சர் வார்டுக்கு தேவையான 40-க்கும் மேற்பட்ட விசிறிகள், 50-க்கும் மேற்பட்ட கட்டில் போன்ற உபகரணங்களை வழங்கியுள்ளனர். அதோடு, அந்த வார்டை வண்ணம் பூசி புதுப்பொலிவு படுத்தியுள்ளனர்.
இன்றைய நிகழ்ச்சியில், கேன்சர் வார்டை ஜெயின் பக்தி மண்டல் அமைப்பினர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தலைமையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கேன்சர் வார்டின் முதன்மை மருத்துவர் சுரேஷ் வெங்கடாசலம், மருத்துவர் ராகவேந்திரா ஜெயின் அமைப்பின் மத குருக்கள் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 4 மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கேன்சர் போன்ற ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. அதேபோல, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் முக்கியமான மூன்று சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதனால், இந்த கேன்சர் வார்டிற்கு மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், இந்த கேன்சர் வார்டில் போதுமான கட்டில், மெத்தை போன்ற உபகரணங்கள் இல்லாத நிலை இருந்தது.

இந்த நிலையில், ஸ்ரீ ஜெயின் சுபாஷ்னா பக்தி மண்டல் ஜெயின் அமைப்பினர் கேன்சர் வார்டுக்கு தேவையான 40-க்கும் மேற்பட்ட விசிறிகள், 50-க்கும் மேற்பட்ட கட்டில் போன்ற உபகரணங்களை வழங்கியுள்ளனர். அதோடு, அந்த வார்டை வண்ணம் பூசி புதுப்பொலிவு படுத்தியுள்ளனர்.
இன்றைய நிகழ்ச்சியில், கேன்சர் வார்டை ஜெயின் பக்தி மண்டல் அமைப்பினர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தலைமையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கேன்சர் வார்டின் முதன்மை மருத்துவர் சுரேஷ் வெங்கடாசலம், மருத்துவர் ராகவேந்திரா ஜெயின் அமைப்பின் மத குருக்கள் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.