கோவை: இடதுசாரி, தலித் செயற்பாட்டாளர்களை கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இடதுசாரி, தலித் செயற்பாட்டாளர்களை கைது செய்ததை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி, தலித் எழுத்தாளர்கள் ஐந்து பேர் ஒரிசா, ஆந்திரா, மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக கூறி அதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இடதுசாரி, தலித் எழுத்தாளர்கள் ஐந்து பேர் ஒரிசா, ஆந்திரா, மகாராஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், அரசு சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாக கூறி அதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மு.ஆனந்தன் தலைமை வகித்தார். இதில் வழக்கறிஞர்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.