அறம் பவுண்டேசன் திரட்டிய நிவாரணப் பொருட்களை சிறப்பு ரயில் மூலம் கேரளா அனுப்பியது தென்னக ரயில்வே

கோவை: கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

கோவை: கேரளாவில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், அறம் அறக்கட்டளை சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், மருந்துகள், உணவுப் பண்டங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என மொத்தம் 21 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் சேமிக்கப்பட்டது. இதில் 7 டன் அளவில் விலங்குகளுக்கு என வைக்கோலும் அடங்கும்.



இந்த சூழலில், 21 டன் எடை கொண்ட இந்த பெரிய அளவிலான நிவாரணப் பொருட்களை அனுப்ப சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இந்த நிவாரணப் பொருட்கள் கோவையில் இருந்து புறப்பட்டு கடந்த ஞாயிறன்று கேரளா மாநிலம் ஆழப்புழா சென்றடைந்தது.

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டத்தின் வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு கூறுகையில், "நிவாரணப் பொருட்களை அனுப்ப ரயில்வே நிர்வாகம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் இருந்தும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் பொருட்டு எங்களுக்கு கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை சரக்கு ரயில் மூலம் கேரளா அனுப்பி வருகிறோம்.

இந்த சூழலில் தான் பெரிய அளவு எடையுள்ள நிவாரணப் பொருட்களை அனுப்ப எங்களுக்கு கோரிக்கை வந்தது. தொடர்ந்து மத்திய ரயில்வே அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், 21 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை கேரளாவுக்கு அனுப்பினோம்." என்றார்.



இது குறித்து அறம் அறக்கட்டளையின் நிறுவனர் லதா சுந்தரம் கூறுகையில், "எங்கள் அமைப்பு திரட்டிய நிவாரணப் பொருட்களை கேரளா கொண்டு செல்ல உதவிய ரயில்வே நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பார்சல் அதிகாரிகள், போர்டர்ஸ் மற்றும் ரயில்வே ஊழியர்கள் என அனைவரும் எங்களுக்கு உதவினர்." என்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...