கேரள மக்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கிய மேட்டுப்பாளையம் பத்திரிக்கையாளர்கள் சங்கம்

கோவை : மேட்டுப்பாளையம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.



கேரளாவில் பெய்த பருவ மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் சிக்கி இன்னும் மீள முடியாமல் தவித்து வருகிறது. மெல்ல மெல்ல மழை நீர்வடிந்த போதும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கேரள மக்கள் இன்னும் தவித்து வருகின்றனர். 



இந்த நிலையில், அந்த மாநில மக்களுக்கு உதவும் வகையில் மேட்டுப்பாளையம் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, நேரடியாக அந்த மாநில மக்களுக்கு கொண்டு சென்று இன்று வழங்கப்பட்டது.



 

இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊழிநூல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று இரவு லாரி மூலம் பத்திரிக்கையாளர்களே நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள், ஆடைகள், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், தண்ணீர் மற்றும் சில்வர் தட்டுகள் உள்ளிட்டவற்றை வழங்கினர். அம்மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் உதவியுடன் உணவுப் பொருட்கள் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரித்து கொடுக்கப்பட்டது.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...