டி.சி. கொடுக்க ஆசிரியர்கள் முயன்றதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவன் பள்ளியில் தற்கொலை முயற்சி

திருப்பூர் : வேறு பள்ளியில் சென்று பயிலுமாறு கூறி பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததால், பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : வேறு பள்ளியில் சென்று பயிலுமாறு கூறி பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததால், பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லடத்தை அடுத்த அருள்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 10-ம் வகுப்பு வரை அருள்புரம் பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் வகுப்பிற்காக பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இதனிடையே, அருள்புரம் அரசு பள்ளியிலேயே உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால், சதீஷ்குமாரை மீண்டும் அருள்புரம் பள்ளிக்கே செல்லுமாறு பல்லடம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்துள்ளனர்.



இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த சதீஷ்குமாரை, வகுப்பிற்குள் அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளிக்கு சென்று பயிலுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...