திருப்பூர் : வேறு பள்ளியில் சென்று பயிலுமாறு கூறி பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததால், பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : வேறு பள்ளியில் சென்று பயிலுமாறு கூறி பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நெருக்கடி கொடுத்ததால், பள்ளி வளாகத்திலேயே மாணவன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடத்தை அடுத்த அருள்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 10-ம் வகுப்பு வரை அருள்புரம் பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் வகுப்பிற்காக பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இதனிடையே, அருள்புரம் அரசு பள்ளியிலேயே உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால், சதீஷ்குமாரை மீண்டும் அருள்புரம் பள்ளிக்கே செல்லுமாறு பல்லடம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த சதீஷ்குமாரை, வகுப்பிற்குள் அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளிக்கு சென்று பயிலுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடத்தை அடுத்த அருள்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 10-ம் வகுப்பு வரை அருள்புரம் பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் வகுப்பிற்காக பல்லடம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். இதனிடையே, அருள்புரம் அரசு பள்ளியிலேயே உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டதால், சதீஷ்குமாரை மீண்டும் அருள்புரம் பள்ளிக்கே செல்லுமாறு பல்லடம் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாக வற்புறுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த சதீஷ்குமாரை, வகுப்பிற்குள் அனுமதிக்காமல் மாற்றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளிக்கு சென்று பயிலுமாறு ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவன், பள்ளி வளாகத்திலேயே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த சக மாணவர்கள் உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.