கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தினை திறந்து வைத்து, எல்.இ.டி. விளம்பரப் பலகையின் செயல்பாட்டினையும் துவக்கி வைத்தார்.

இந்த மரத்தின் மதிப்பு, ரூ.30 லட்சம் என்றும், இதுபோல் மொத்தம் 25 இடங்களில் இந்த தங்கமரம் அமைக்கப்படவுள்ளது என்றும் இதன் மூலம் மாநகராட்சிக்கு வருட வருமானம் ரூ.4,75,000 என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் லட்சுமணன் நன்றி தெரிவித்தார். மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், செயற்பொறியாளர் (திட்டம்) திரு.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.