வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ட்ரீ திறப்பு

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வ.உ.சி. மைதானத்தில் வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் வ.உ.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வைஃபை வசதியுடன் கூடிய தங்கமரத்தினை திறந்து வைத்து, எல்.இ.டி. விளம்பரப் பலகையின் செயல்பாட்டினையும் துவக்கி வைத்தார். 



இந்த மரத்தின் மதிப்பு, ரூ.30 லட்சம் என்றும், இதுபோல் மொத்தம் 25 இடங்களில் இந்த தங்கமரம் அமைக்கப்படவுள்ளது என்றும் இதன் மூலம் மாநகராட்சிக்கு வருட வருமானம் ரூ.4,75,000 என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் லட்சுமணன் நன்றி தெரிவித்தார். மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், செயற்பொறியாளர் (திட்டம்) திரு.எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...