கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ராஜேந்திரன் (65) உடல் நிலை குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த மூத்த பத்திரிகையாளர் ராஜேந்திரன் (65) உடல் நிலை குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினமணி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றியவர் ராஜேந்திரன். அவரது மறைவுக்கு மேட்டுப்பாளையம் பத்திரிகையாளர் மன்றம், மூத்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் பத்திரிகையாளர் மன்றத் தலைவர் ஹாஜா செரிப் கூறுகையில், "ராஜேந்திரன் மிகவும் நல்ல மனிதர். அனைவருக்கும் உதவும் குணம் கொண்டனர். எந்த வித வேற்றுமையும் இன்றி அனைவரிடமும் நன்றாக பழகுவார். அவரது இழப்பு எங்களுக்கு வலது கை போனது போல் உள்ளது." என்றார்.
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் செந்தில் கூறுகையில், "சக பத்திரிக்கையாளர்களிடம் அன்பாகப் பழகுபவர். கல்விக்காக பல உதவிகளைச் செய்தவர். அவரது மறைவு செய்தி அதிர்ச்சியாக உள்ளது." என்றார்.